"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஆய்வின் போது, 10 ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை பயணிகளிடம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அதிகாரிகள் முழுநேரமும் கண்காணித்து வருவதாகவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com