தனி அதிகாரி நியமனத்திற்கு எதிராக விஷால் வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
தனி அதிகாரி நியமனத்திற்கு எதிராக விஷால் வழக்கு
Published on

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் சார்பில் தொடரப்பட்ட இவ்வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.சங்கத்தில், எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தனி அதிகாரியை நியமனம் செய்தது, சட்டவிரோதம் என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், விஷால் தரப்பினர் முறையிட்டனர். இதனை ஏற்ற நீதிபதி, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com