"விபத்து இழப்பீடு தொகையை பெற்று தரவில்லை" - வழக்கறிஞர் மீது மாற்றுத்திறனாளர் புகார்

விபத்து இழப்பீடு தொகையை பெற்றுத் தராமல் வழக்கறிஞர் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, சேலம் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
"விபத்து இழப்பீடு தொகையை பெற்று தரவில்லை" - வழக்கறிஞர் மீது மாற்றுத்திறனாளர் புகார்
Published on

விபத்து இழப்பீடு தொகையை பெற்றுத் தராமல் வழக்கறிஞர் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, சேலம் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கால்களை இழந்தார். இது குறித்து கதிர்வேல் என்ற வழக்கறிஞர் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்துள்ளார். ஆனால் வழக்கறிஞர் இன்னும் நிவாரணத்தை பெற்று தரவில்லை என கூறி, சதீஷ், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com