ஆவின் பால் - அமைச்சர் சொன்ன தகவல்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவிகிதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் உப பொருட்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன் பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்