ஆவின் தலைமையகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு - அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்றொரு காவலாளி கைது

சென்னை,தேனாம்பேட்டை ஆவின் தலைமையிடத்தில் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்றொரு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவின் தலைமையகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு - அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்றொரு காவலாளி கைது
Published on
சென்னை,தேனாம்பேட்டை ஆவின் தலைமையிடத்தில் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்றொரு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் திருமாள் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான குமாரசாமி, நேற்று முன் தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரித்த போலிசார் குமாரசாமியுடன் பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர்தான் முன் விரோதம் காரணமாக குமாரசாமியை அடித்து கொலை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, ஆனந்தனை கைது செய்த போலிசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com