"ஆத்தாடி.." அதிமுக அலுவலகத்தில் புகுந்த 11 அடி பாம்பு - விறுவிறுவென சீறி சென்ற காட்சி
ஈரோட்டில் அதிமுக அலுவலக வளாகத்தில் புகுந்த 11 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு, பாம்பு பிடி வீரர் மூலம் பிடிக்கப்பட்டது. பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியினர் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மஞ்சள் நிற சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்
Next Story
