டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர் பலி
டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து ஒடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர் பலி
டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 4 ஆம் தேதி சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வடமாநில இளைஞர்
டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து நந்தியம்பாக்கம் அருகே ஒடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், 4 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
