பஸ் மீது வேகமாக மோதிய லாரி... 13 பயணிகள் காயம்... புதுகையில் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.
கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து முருங்கக்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
