கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் மரத்தில் தூக்கில் தொங்கிய படி அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சென்ற சின்னசேலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.