நள்ளிரவில் கத்தி உயிரை விட்ட நபர்.. நேரில் பார்த்த மகன் சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னையில், நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூலை மாதம் பெசன்ட் நகர் சலையில், ஆட்டோவில் ஏற சென்ற முகமது நஸ்ரூதின் என்பவரை தெரு நாய் கடித்தது. இதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 12ம் தேதி முகமது நஸ்ருதீனுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story
