``கீழடி ஆய்வு முடிவை மாற்ற சொல்லி மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதம்’’

"கீழடி ஆய்வறிக்கையை மாற்ற சொன்னார்கள்.. மறுத்துவிட்டேன்" - இந்திய தொல்லியல் துறை இயக்குநர்

கீழடி ஆய்வறிக்கையை மாற்றச் சொல்லி மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட்டால் தமிழரின் பெருமை உலகளவில் உயரும் என்றார். 

X

Thanthi TV
www.thanthitv.com