Election2026 | மகன் ஓட்டை செலுத்திய தந்தை.. `சேலஞ்ச்’ செய்ய முடியாத கையறு நிலையில் மகன்
மகன் ஓட்டை செலுத்திய தந்தை `சேலஞ்ச்’ செய்ய முடியாத கையறு நிலையில் மகன் #election2026 #tnelection2026 #assemblyelection #electioncommission #thanthitv Uploaded On 24.04.2026 மகனின் ஓட்டை தவறுதலாக தந்தை போட்டுவிட்டதால் குழப்பம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகனின் ஓட்டை தவறுதலாக தந்தை போட்டுவிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் தினேஷ். இருவருக்கும் வேறு வேறு வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. தவறுதலாக லட்சுமணன், தனது மகன் தினேஷின் ஓட்டு சிலிப்பை எடுத்து சென்று வாக்கு செலுத்திவிட்டார். வாக்குச்சாவடி அலுவலர்களும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். இதனால் மகன் தினேஷ் ஓட்டு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் சேலஞ்ச் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம் என அறிவுறுத்தினர். அப்படி வாக்கு செலுத்தினால் தனது தந்தையின் ஓட்டு செல்லாததாகிவிடும் என மகன் தினேஷ் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
