Cuddalore || கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - கயிறு மூலம் மீட்ட போலீசார்
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - கயிறு மூலம் மீட்ட போலீசார்
Cuddalore || கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - கயிறு மூலம் மீட்ட போலீசார் #Cuddalore #thanthitv கடலூர் மாவட்டம் கெங்கைகொண்டான் அருகே, கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவனை துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கெங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த சிறுவன், கோவில் விசேஷத்தின் போது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் காவலர் லியாகத் கான், கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இருந்து அந்தச் சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
