நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்
Published on

சென்னை ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி பெண் போலீசுக்கு, சக போலீசார் வளைகாப்பு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த தீபிகா, ராமாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். தீபிகாவையும் அவரது கணவர் அருண்குமரையும் அமர வைத்து, சீர்வரிசை தட்டுகளுடன் வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com