தமிழக மீனவர்கள் 9 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை
Published on
நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். நேற்றிரவு நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் 9 மீனவர்களை சிறைபிடித்தனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com