மாலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12 ஆயிரத்து 515 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.....காலையில் கிராமுக்கு 3 ரூபாய் கூடிய நிலையில், மாலையில் 2 ரூபாய் அதிகரித்தது....
  • அரசு முறைப் பயணமாக ஜோர்டான் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் அசன், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்....தொடர்ந்து சிவப்புக் கம்பள வரவேற்புடன் அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.....
  • ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்....பிரதமருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.....
  • மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி நாட்களை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது...திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி பங்களிப்பில் மாற்றம் செய்து புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது....
  • 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்...காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரை நீக்கி, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
  • பாஜகவின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கபட்ட நிதின் நபின், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்டார்...தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிதின் நபினுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கட்சி நிர்வாகளிடன் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • கொல்கத்தா, மும்பையை தொடர்ந்து டெல்லியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ரசிர்களை சந்தித்தார்.....அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மெஸ்ஸியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.....
  • 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
  • முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், நடவடிக்கை எடுக்க தாமதம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது...ஜனவரி 6ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
  • சட்டமன்றத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.,மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மெக்வால், முரளிதர் மோஹல் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது.
  • திருப்பரங்குன்றம் மலையில், தர்காவின் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தர்கா தரப்பு வாதிட்டுள்ளது...கல் தூணில் கடந்த காலங்களில் 2 முறை தீபம் ஏற்ற முயற்சி நடைபெற்ற போது ஆட்சியர் அதனை தடுத்துள்ளார் என்றும் தர்கா தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்