Nepal Flood | Disaster | மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்-கண்ணீர் மல்க தவிக்கும் குடும்பத்தினர்
Nepal Flood | Disaster | மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் - கண்ணீர் மல்க தவிக்கும் குடும்பத்தினர்
நேபாள பேரழிவு - 49 தமிழர்களின் கதி என்ன? நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், குரோம்பேட்டை தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாய யாத்திரை சென்ற 49 தமிழர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி நேபாளத்தின் ராசுவாகடி குடியுரிமை மையத்தில் காத்திருந்தபோது திடீரென வெள்ளம் சூழ்ந்து அலுவலகம் அடித்துச் செல்லப்பட்டதில், டிராவல்ஸ் உரிமையாளர் மகன் சத்யநாராயணன் உட்பட 49 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதில் பாமக முன்னாள் கவுன்சிலர் குமாரின் குடும்பத்தினர் 6 பேர் உட்பட குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பல்லாவரம் தாசில்தார் தலைமையிலான குழுவினர் தகவல்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாயமானவர்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
