

கஜா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு
கஜா புயல் பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஆர்.பி, உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்திய குழு, தமிழகம் வருவதால், எங்கெங்கு பார்வையிட அழைத்து செல்வது - பயண திட்டம் - மக்கள் சந்திப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.