வருசா வருசம் 6 % சொத்து வரி உயர்வா? - அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
வருசா வருசம் 6 % சொத்து வரி உயர்வா? - அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தானாக உயர்த்த வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்த, அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் சவுத்ரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை தானாக உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணை சட்ட விரோதமானது என கூறி ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
