

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ததன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இருக்காது என்றார்.