மனிதநேய அறக்கட்டளை மையத்தை சேர்ந்த 35 பேர் வெற்றி
முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற, 35 மாணவர்கள் UPSC நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பல மாணவர்களுக்கு, கட்டணமில்லா UPSC பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 35 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த சிவசந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23 வது இடத்திலும், ஆர்.மோனிகா என்பவர் 39 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
Next Story