அரசு பேருந்து உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : 15 பேர் படுகாயம்

பெரம்பலூர் அருகே அரசு விரைவு பேருந்து, வேன், லோடு ஆட்டோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பேருந்து உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : 15 பேர் படுகாயம்
Published on
பெரம்பலூர் அருகே அரசு விரைவு பேருந்து, வேன், லோடு ஆட்டோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிறுவாச்சூர் அருகே திடீரென நின்றதால், பின்னால் வந்த லோடு ஆட்டோவும், அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதின. இதில், ஆட்டோவும் வேனும் பக்கவாட்டில் கவிழ்ந்த‌து. இதனால், சிறுமிகள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். விபத்தால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com