2 பெண்கள் உள்ளாடைக்குள் 4.7 கிலோ தங்கம்சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய காட்சி..

2 பெண்கள் உள்ளாடைக்குள் 4.7 கிலோ தங்கம்சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய காட்சி..
Published on

சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்கள், சினேகா மற்றும் சங்கீதா. இவர்கள் தங்கம் கடத்துபவர்களுக்கு, உடந்தையாக இருந்ததாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இவர்களை பின் தொடர்ந்த அதிகாரிகள், இவர்களது வீட்டில் திடீர் சோதனையை நடத்தினர். அப்போது தங்க கட்டிகள், தங்க உருளைகள், தங்க பசைகள் என சுமார் 4.7 கிலோ தங்கம் சிக்கியது. இதனையடுத்து, பெண்களிடம் நடத்திய விசாரணையில் துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை பெறுவதும், அதனை சுங்கத்துறையிடம் சிக்காமல் உள்ளாடைக்குள் வைத்து வெளியே கொண்டு வந்ததும் தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com