ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் காரில் கடத்தல் - இருவர் கைது

தங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் காரில் கடத்தல் - இருவர் கைது
Published on

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மீஞ்சூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பத்து பேரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அன்று காரில் சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ராமநாதபுரத்தை சேர்ந்த கோடி , கண்ணன் ஆகியோரை இருவரை கைது செய்தனர். கார்த்திகையனை 3 நாட்கள் கழித்து இறக்கி விட வந்த போது இருவரும் கைது செயப்பட்டனர். தங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com