Thoothukudi Latest News | தூத்துக்குடியில் 19 வயது இளைஞர் வெட்டி படுகொலை
தூத்துக்குடியில் 19 வயது இளைஞர் வெட்டி படுகொலை
#thoothukudimurder #thoothukudinews தூத்துக்குடி, தாளமுத்து நகரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்து நகரை சேர்ந்த மாரி செல்வம் என்ற 19 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் மாரி செல்வத்தை, 4 பேரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரி செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை தாளமுத்து நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய புவனேஷ் குமாரை தேடி வருகின்றனர்.
