

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி உள்ளது.. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. முகக் கவசம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.