மீண்டும் இந்திய அணியோடு இணைந்த கோலி... ரசிகர்கள் மகிழ்ச்சி

அவசர காரணங்களுக்கான இந்தியா திரும்பியிருந்த விராட் கோலி, இந்திய அணியோடு மீண்டும் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டிற்கு சென்ற இந்திய வீரர் விராட் கோலி, அவசர காரணங்களுக்காக மும்பை திரும்பியிருந்தார். இந்தநிலையில் அவர், மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று இந்திய அணியோடு இணைந்துள்ளார். செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் (SUPER SPORT PARK) மைதானத்தில், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com