

ஐபிஎல் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக ஆர்.சி.பி வீரர் கோலி தெரிவித்துள்ளார். 13 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி , ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு வார வலை பயிற்சி தன்னை மேலும் சீராக்கி உள்ளதாக கோலி கூறியுள்ளார். இதனிடையே கோலி வலை பயிற்சியில் சிக்ஸர்கள் விளாசும் வீடியோவை ஆர்.சி.பி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.