"மாவட்ட அளவிலான வீரர்களை தேர்வு செய்தோம்" - டி.என்.பி.எல். அணி உரிமையாளர்கள் கருத்து

தமிழகத்தின் மற்ற மாவட்ட வீரர்கள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாக, டி.என்.பி.எல். ஏலத்தில் பங்கேற்ற அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"மாவட்ட அளவிலான வீரர்களை தேர்வு செய்தோம்" - டி.என்.பி.எல். அணி உரிமையாளர்கள் கருத்து
Published on

தமிழகத்தின் மற்ற மாவட்ட வீரர்கள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாக , டி.என்.பி.எல். ஏலத்தில் பங்கேற்ற அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அணி உரிமையாளர்கள், இம்முறை அனைத்து அணியினரும் புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளதால், புதிய யுத்திகளுடன் தான் போட்டியை அணுகுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். சேலம், கோவை ஆகிய புதிய இடங்களில் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com