கோலாகலமாக நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்...

கோலாகலமாக நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்...
Published on

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக நிறைவு பெற்றது. பாரிஸ் நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கியில் வெண்கலம் வென்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர். வண்ணமயமான வாண வேடிக்கைகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுவிழா களைகட்டியது.

X

Thanthi TV
www.thanthitv.com