"4 வருடம் கழித்து தமிழகத்துக்காக கொண்டு வருவேன்" - உறுதியாய் சொன்ன வீரர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு 6 பேர் பங்கேற்ற நிலையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி சங்கத்தினர் கெளரவித்தனர். தமிழக அரசு தங்களுக்கு ஊக்கமளித்ததாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com