வைஷாலி அவமதிப்பா? - பூ கொடுத்து மன்னிப்பு கேட்ட செஸ் வீரர்

x

தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலியிடம் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பேக் யாகுபோவ் Nodirbek Yakubboev மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் செஸ் தொடரின் நான்காவது சுற்று போட்டியில், வழக்கத்தைமீறி வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது சர்ச்சையானது. மதரீதியிலான காரணங்களுக்காக கைகுலுக்கவில்லை என நோடிர்பேக் கூறினாலும், முந்தைய தொடர்களில் வீராங்கனைகளுக்கு கைகுலுக்கியதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வைஷாலிக்கு பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை வழங்கி உஸ்பெகிஸ்தான் வீரர் மன்னிப்பு கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்