2 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்

வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்
Published on

வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெ​ஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர், நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com