சென்னையில் நடக்கும் சர்வதேச கோல்ஃப் தொடர்" - அனைவருக்கும் அனுமதி இலவசம்"

x

சென்னையில் வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்தியா சிமெண்ட்ஸ் ப்ரோ சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 123 தொழில்முறை வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும், நந்தனம் பகுதியில் உள்ள காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கோல்ஃப் மீதான மக்களின் பார்வை மாறி வருவதாகவும், இதனை கிராமங்களுக்கு கொண்டு செல்ல சில காலங்கள் ஆகும் என தொழில்முறை கோல்ஃப் போட்டிகளுக்கான பி.ஜி.டி.ஐ அமைப்பின் செயல் அலுவலர் உத்தம் சிங் முண்டி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்