இந்திய மகளிர் அணி ருத்ரதாண்டவம் - வரலாற்று சாதனை

இந்திய மகளிர் அணி ருத்ரதாண்டவம் - வரலாற்று சாதனை
Published on
• மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அயர்லாந்து அணியை பந்தாடி, இந்திய மகளிர் அணி தொடரை ஒயிட்வாஷ் செய்தது. • ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 435 ரன்கள் குவித்தது. குறிப்பாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 70 பந்துகளில் சதமடித்து அதிவேகமாக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான பிராதிகா ராவல்((PRATIKA RAWAL)) 154 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், இந்த போட்டியின் மூலம், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஆடவர் அணியின் 418 ரன்கள் சாதனையை மகளிர் அணி முறியடித்தது.
X

Thanthi TV
www.thanthitv.com