இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு

இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மறுத்துள்ளார்
இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு
Published on

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேறகும் இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மறுத்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் தொடர் நடப்பதால் அணிக்கு அனுபவ வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என கருதி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஜெயவர்த்தனேவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.இது குறித்து அவர் கூறுகையில் அணித் தேர்வு முடிந்து விட்ட பிறகு தன்னால் எதிலும் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.ஐபிஎல் போட்டிகளில் ஜெயவர்த்தனே தலைமையில் செயல்பட்ட மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com