ஆசியக்கோப்பை கால்பந்து தொடர்... காலிறுதியில் ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்

x

ஆசியக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஈரான் முன்னேறி உள்ளது. அல்-ரயான் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை ஈரான் எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் கோல் அடித்து முன்னிலை பெற்றது. 2வது பாதி ஆட்டத்தில் ஈரான் பதில் கோல் போட்டது. இதனால் ஆட்டம் சூடுபிடித்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஈரான் கோலாக்கிய நிலையில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரான் த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்