வரும் 29ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீரர்கள் பயிற்சி செய்வதை காண ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.இந்நிலையில் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது , ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து தோனியின் காலில் விழுந்து கும்பிட்டார். உடனடியாக அங்குவந்த காவலர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.