"விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்" - பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை

x

பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதற்குத் தான் வீரர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக் குழுவின் புதிய தலைவர் வஹாப் ரியாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் வஹாப் ரியாஸ், ராஃப் விலகி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தேசிய அணிக்கு முக்கியத்துவம் தராவிட்டால் எதிர்காலத்தில் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்