ரஞ்சி கோப்பை - அசத்திய கேப்டன் - காலிறுதியில் கர்நாடகா அணி

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடக அணியின் புதிய கேப்டன் தேவ்தத் படிக்கல் தனது முதல் போட்டியிலேயே அற்புதமான தொடக்கத்தை கொடுத்ததால் அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில், கர்நாடக அணிக்கு 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் படிக்கல், அவுட் ஆகாமல் 85 பந்துகளுக்கு 120 ரன்கள் எடுத்ததால் வெறும் 28 ஓவர்களிலேயே கர்நாடக அணி எளிதில் இலக்கை எட்டியது.

X

Thanthi TV
www.thanthitv.com