+2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் ம் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

x

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி . இவர் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த சஞ்சய்யப்பன் என்ற இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதில், சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் மாணவியின் வீட்டுக்கு வந்து அந்தமான் செல்வதாக தெரிவித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் இறப்பு போலீ சாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்காக மாணவியின் உடலை பெற முயற்சி செய்தனர். அப்போது, மாணவியின் உடலை தர மறுத்த உறவினர்கள், நாங்கள் வழக்கு தொடுக்கவில்லை எனவும், மாணவியின் இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லையெனவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்