Reels நடத்திய `புரட்சி’ - அரசே அறிவித்தது.. இனி மாறப்போகும் கூமாப்பட்டி

x

கூமாப்பட்டியை ட்ரெண்டிங் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி பிளவக்கல் அணையில் உள்ள பூங்காவை புணரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா உறுதி

விருதுநகர் ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தள பதிவு....

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்