விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.