``இதனால் தான் ராஜினாமாவை திரும்ப பெற்றேன்...'' உண்மையை உடைத்த துரை வைகோ
மதிமுகவுக்குள் நிலவிய உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக கூறிய துரை வைகோ ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றது ஏன் ஏன்பது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, மதிமுக நிர்வாகிகளுக்குள் இருந்த கோபம் வைகோவின் மனிதநேயத்திற்கு முன்பு அடிபணிந்து விட்டது என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் பாஜக உடனான கூட்டணி அதிமுகவிற்கும் பிடிக்கவில்லை மக்களுக்கும் பிடிக்கவில்லை. இந்த ஒவ்வாத கூட்டணி ஒரு போதும் வெற்றி பெறாது. என கருத்து தெரிவித்திருக்கிறார்.
Next Story
