Amitshah | ``2029-க்குள் நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்’’ - அமித்ஷா சூளுரை

``2029-க்குள் நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்’’ - அமித்ஷா சூளுரை

``2029-க்குள் நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்’’ - அமித்ஷா சூளுரை.. வெடிக்க காத்திருக்கும் பிரளயம்

2029ம் ஆண்டுக்கு முன்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்... மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட தனிநபர் சட்டங்களில், மதம் சார்ந்த வேறுபாடின்றி ஒரே சட்டத்தை கொண்டுவருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறினார்... ஏற்கனவே பல மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் இதை அமல்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.... மேலும், சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com