விருதுநகர் வாக்காளர்களுக்கு டோக்கன்.. காங்கிரஸ் வேட்பாளர் மீது ஆக்‌ஷன்.. `NO' சொன்ன நீதிமன்றம்

x

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாகவும், அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரியும் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாளே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விளம்பர நோக்குடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்