விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு..காதலிப்பதாக கூறி மோசடி செய்ததாக புகார்..

x

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் விக்ரமன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார். அந்த மனுவில் விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறி நடித்து, தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிவித்து இருந்தார். மேலும் தன்னை சாதிய ரீதியாக அவமதித்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் புகார் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடினார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் விக்ரமன் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்