தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, கொரோனா பரவலால் தாமதமானதாக குறிப்பிட்டார். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டிய விஜயகாந்த், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com