"களத்தில் நிற்கும் விஜய்... அதிமுக இதை செய்யாவிட்டால்.." புகழேந்தி
தேர்தல் பரப்புரையில் விஜய்க்கு அதிகம் கூட்டம் கூடுவதால், அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் ஒன்றிணையாவிட்டால், கட்சியே காணாமல் போகும் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகழேந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எம்ஜிஆர் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் புகைப்படத்தை விஜய் பயன்படுத்துவது தவறு கிடையாது என்றும் அவர் கூறினார்.
Next Story
