விசிக-வின் 62 பக்க தேர்தல் அறிக்கை.."இது மட்டும் தான் குறிக்கோள்" - திருமாவளவன் பேச்சு

x

பாஜகவை வீழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டு விசிகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விசிகவின் பானை சின்னத்திற்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன சக்திகளை அகற்றுவது, சீன ஆக்கிரமிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்டவை அடங்கிய 62 பக்க தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய திருமாவளவன், பாஜகவை வீழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டு விசிகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்